ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் பல நாடுகள் ஒன்றைணைந்து கூட்டாக முன்வைக்கவுள்ள இலங்கைக்கு எதிரான பிரேரணையை எதிர்கொள்ள தயார் என வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
இலங்கை ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.