Connect with us

உள்நாட்டு செய்தி

கொவிட் தடுப்பூசியை பெற்றுக் கொள்ளாத பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக எதிர்வரும் வாரத்தில் மேலும் 3 நாட்கள்

Published

on

இதுவரை ஒக்ஸ்பர்ட் எஸ்ட்ரா செனகா கொவிட் தடுப்பூசியை பெற்றுக் கொள்ளாத பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக எதிர்வரும் வாரத்தில் மேலும் 3 நாட்கள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை தேசிய கொவிட் செயலணியால் இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்ற படைக்கள சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ தெரிவித்தார்.

அதன்படி, பெப்ரவரி 23 தொடக்கம் 25 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் கொழும்பு நாரஹேன்பிடியில் அமைந்துள்ள இராணுவ வைத்தியசாலையில் காலை 8.30 மணி தொடக்கம் மதியம் 12.00 மணி வரை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு குறித்த தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அநேகமான பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் வாரத்தில் கொழும்பிற்கு வருகை தந்து பாராளுமன்ற கூட்டத்தொடர்களில் கலந்துக் கொள்ளவுள்ள நிலையில் அவர்களுக்கு இத்தினங்களில் கொவிட் தடுப்பூசியை பெற்றுக் கொடுக்க தீர்மானிக்கப்பட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.