Connect with us

அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சி தலைமைத்துவ சபையை நியமிக்கவுள்ளது

Published

on

 

ஐக்கிய தேசியக் கட்சி புதிய வருடத்தில் கட்சியை நடத்துவதற்கு தலைமைத்துவ சபையொன்றை நியமிக்கவுள்ளதுடன், கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க புதிய அமைப்பிற்கு சில அதிகாரங்களை வழங்க எதிர்பார்த்துள்ளார்.

தலைமைத்துவ சபையில் ருவான் விஜேவர்தன, ஹரின் பெர்னாண்டோ, வஜிர அபேவர்தன, ரவி கருணாநாயக்க சாகல ரத்நாயக்க, அகில விராஜ் காரியவசம் மற்றும் பாலித ரங்கே பண்டார ஆகியோர் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய வருடத்தில் தலைமைத்துவ சபையொன்று நியமிக்கப்படும் என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ உறுதிப்படுத்தியுள்ளார்..பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன, வஜிர, சாகல, அகிலா, ரவி மற்றும் ரங்கே ஆகியோர் சபையில் இருப்போம் ஆனால் ஏனையவர்கள் தொடர்பில் உறுதியாக தெரியவில்லை” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏனைய ஆதாரங்களின்படி புத்தாண்டு காலத்தில் சபை நியமிக்கப்படவுள்ளது.