Connect with us

உள்நாட்டு செய்தி

வவுனியா பேருந்து நிலையத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

Published

on

Digital News Team   

வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இன்று முற்பகல் (19) குறித்த சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.வவுனியா புதிய பேருந்து நிலையத்திலுள்ள பயணிகள் இருக்கை ஒன்றிலிருந்து அவர் சடலமாக மீட்கப்பட்டதாக தெரியவந்துள்ளதுமீட்கப்பட்ட சடலம் வவுனியா பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் உயிரிழந்த நபரை அடையாளம் காண்பதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *