Connect with us

உள்நாட்டு செய்தி

சுற்றுலா பயணிகளின் வருகை குறித்த அறிவிப்பு…!

Published

on

  இம்மாதத்தின் கடந்த சில நாட்களில் 50,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.இம்மாதம் முதலாம் திகதி முதல் 15ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 50,395 பயணிகள் வருகை தந்துள்ளதாக அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.அவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள், எண்ணிக்கை 12,261.மேலும் ரஷ்ய, பிரித்தானிய, சீன, ஜேர்மன், அவுஸ்திரேலியா போன்ற பல நாடுகளின் சுற்றுலாப் பயணிகள் குறிப்பிட்ட காலப்பகுதியில் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, கடந்த மாதத்தில் 111,938 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.இதன்படி, இவ்வருடத்தின் கடந்த சில மாதங்களில் இலங்கைக்கு வந்துள்ள மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,066,651 என குறிப்பிடப்பட்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *