Connect with us

உள்நாட்டு செய்தி

பெரஹராவில் கலந்துகொள்ள சென்ற யானை மீது துப்பாக்கிச்சூடு

Published

on

   மஹியங்கனை ரஜமஹா விகாரையில் இடம்பெற்ற பெரஹரா ஊர்வலத்தில் கலந்துகொள்வதற்காக சென்ற மஹரகம சீதா யானை மீது துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

47 வயதான சீதா யானை ஊர்வலத்தில் பங்கேற்ற பின்னர் விஹாரையின் மைதானத்தில் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த யானை மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

வனவிலங்கு அதிகாரி ஒருவரால் யானை மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக வனவிலங்கு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சந்தன சூரியபண்டார தெரிவித்துள்ளார்.இந்த சம்பவம் தொடர்பில் அமைச்சு மட்டத்திலான விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் காட்டு யானை என தவறாகக் கருதி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான யானைக்கு சிகிச்சையளிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *