Connect with us

உள்நாட்டு செய்தி

முதியவர் சடலமாக மீட்பு

Published

on

யாழில் காணமல் போனதாக தனது உறவினர்களால் தேடப்பட்ட முதியவர் ஒருவர் காணி ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நபர் இன்றையதினம் (28.09.2023) உடுவில் பகுதியில் உள்ள காணி ஒன்றில் இருந்து அடையாளம் காணப்பட்டுள்ளார்.உடுவில் மல்வம் பகுதியைச் சேர்ந்த அமிர்தலிங்கம் செல்வராசா (வயது 71) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த (24.09.2023) ஆம் திகதி வீட்டில் இருந்து முதியவர் ஒருவர் வெளியே சென்ற நிலையில், அவர் காணமல் போனதாக அவரது உறவினர்களால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் முதியவர் சடலமாக அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து சுன்னாகம் பொலிஸார் இதுகுறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *