Connect with us

அரசியல்

பெருந்தோட்ட மக்கள் தொடர்பில் இன்று விவாதம்

Published

on

பெருந்தோட்ட மக்கள் தொடர்பான அரசியல், பொருளாதார, சமூக, பின்னடைவுகள் மற்றும் அதற்கான முன்மொழிவுகள் குறித்து இன்று பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளது.நாடுபூராகவும் மலையக மக்களுக்கான காணியுரிமை தொடர்பானவும் மலையகம் 200 தொடர்பிலும் பல போராட்டங்கள் இடம்பெற்று வரும் நிலையில், இன்றைய அமர்வு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

தோட்டத் தொழிலாளர்களுக்கு 10 பேர்ச்சஸ் காணியை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் தொழில்சாலைகள் அமைச்சர் ரமேஷ் பத்திரன அண்மையில் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.