உள்நாட்டு செய்தி
கொவிட்டால் நேற்று மேலும் 8 பேர் பலி

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 8 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 313 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று உயிரிழந்தவர்களின் விபரம்
கொழும்பு 10 பகுதியைச் சேர்ந்த 61 வயதான ஆண்
கொழும்பு 15 பகுதியைச் சேர்ந்த 52 வயதான ஆண்
பொக்குனவிட்ட பகுதியைச் சேர்ந்த 58 வயதான பெண்
இராஜகிரிய பகுதியைச் சேர்ந்த 79 வயதான ஆண்
கொழும்பு 15 பகுதியைச் சேர்ந்த 93 வயதான ஆண்
மடுவல பகுதியைச் சேர்ந்த 62 வயதான பெண்
வாதுவ பகுதியைச் சேர்ந்த 39 வயதான பெண்
கொழும்பு 12 பகுதியைச் சேர்ந்த 63 வயதான ஆண்
-அரசாங்க தகவல் திணைக்களம்-