Connect with us

உள்நாட்டு செய்தி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான இறுதி அறிக்கை இன்று ஜனாதிபதியிடம்

Published

on

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான இறுதி அறிக்கை இன்று (31) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் கையளிக்கப்படவுள்ளது.

குறித்த ஆணைக்குழு கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டெம்பர் 20 ஆம் திகதி நியமிக்கப்பட்டதுடன், இதுவரை அதாவது கடந்த ஒன்றரை வருடமாக 457 பேரிடம் சாட்சியங்களை பெற்றுள்ளது.

ஆணைக்குழுவின் முதலாவது இடைகன்கால அறிக்கை 2019 டிசம்பர் 20 ஆம் திகதியும், இரண்டாவது இடைக்கால அறிக்கை 2020 ஆம் ஆண்டு மார்ச் இரண்டாம் திகதியும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.