Connect with us

உள்நாட்டு செய்தி

அவுஸ்திரேலியாவில் தொழினுட்ப கோளாறுக்குள்ளான விமானம் மீண்டும் நாட்டிற்கு

Published

on

அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் தொழில்நுட்பக் கோளாருக்குள்ளான இலங்கை விமானம்  மீண்டும்  நாட்டை வந்தடைந்துள்ளது

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான  UL-605 எனும்  குறித்த விமான இன்று காலை 7.45 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக   விமான நிலைய கடமைநேர முகாமையாளர் தெரிவித்துள்ளார்

சிறுவர்கள் ஐவர் உட்பட  218 பயணிகள் மற்றும் 17 பணியாளர்கள்  குறித்த விமானமூடாக நாட்டை வந்தடைந்துள்ளனர்.

பிரான்சில் தயாரிக்கப்பட்ட   v -330 எயார்பஸ்  விமானம்  கடந்த  15 ஆம் திகதி  இரவு 10.25 க்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கவிருந்த நிலையில்  விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமான சேவை  ரத்து செய்யப்பட்டது

இதனையடுத்து   குறித்த விமானத்தை  பழுதுபார்ப்பதற்காக , ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் 6 பொறியியலாளர்கள் குழுவினர் அவுஸ்திரேலியா  சென்றிருந்தனர்.

இந்த நிலையில்  பழுதுபார்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு இன்று குறித்த விமானம் மீண்டும் நாட்டை வந்தடைந்துள்ளது.