Connect with us

உள்நாட்டு செய்தி

பேராதனையில் முன்பள்ளி ஆசிரியர் ஒருவர் வெட்டிப் படுகொலை.

Published

on

பேராதனை, இலுக்வத்தை பகுதியில் முன்பள்ளி ஆசிரியர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இக் கொலைச் சம்பவம் இன்று (07) காலை இடம்பெற்றுள்ளதாக பேராதனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முருதலாவ பகுதியைச் சேர்ந்த அஞ்சலி சாப்பா என்ற 25 வயதுடைய யுவதியே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

முன்பள்ளியில் நடைபெறவிருந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காகச் சென்றிருந்த வேளையிலேயே இந்த கொலைச் சம்பவம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்துடன் தொடர்புடைய எவரும் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்