Connect with us

உள்நாட்டு செய்தி

ஜனாதிபதியின் உத்தரவிற்கு அமைய துருக்கிக்கு அதிரடியாக களமிறங்க தயாராகும் இலங்கை மீட்பு படைகள்

Published

on

துருக்கியில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்குண்டுள்ளவர்களை மீட்பதற்கான உதவிகளை வழங்க இலங்கை முன்வந்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உத்தரவிற்கு அமைய, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, இந்த விடயத்தை துருக்கி வெளிவிவகார அமைச்சருக்கு அறிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

துருக்கி – சிரியா எல்லை பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் 1800ற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதுடன், 7000திற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.