Connect with us

உள்நாட்டு செய்தி

நிலக்கரி வரும் வரை மின்சார விலை அதிகரிக்கும்

Published

on

நிலக்கரி நெருக்கடி காரணமாக நீண்ட கால மின்வெட்டை தவிர்க்கும் வகையில் எண்ணெய் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்ய வேண்டியுள்ளதாக இலங்கை மின்சார சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், அதற்கு நிலக்கரியில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்வதை விட அதிக விலை கொடுக்க வேண்டி வரும் என்று தெரிவிக்கப்பட்டது. நிலக்கரியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பதில், ஒரு யூனிட் மின்சாரம் 60 முதல் 62 ரூபாய் வரை செலவாகிறது. எண்ணெய் மின் உற்பத்தி நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் ஒரு யூனிட் மின்சாரத்திற்கு யூனிட்டுக்கு விலை நூறு ரூபாய் எற்று செலவாகும். மேலும், களனிதிஸ்ஸ கூட்டு சுழற்சி மின் நிலையத்திலிருந்து நாப்தாவைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டாலும், மின்சார அலகு 43 ரூபாவாகும். தற்போதைய நிலவரப்படி அந்த ஆலையில் இருந்து நாப்தா இல்லாமல் டீசல் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்தால் ஒரு யூனிட் விலை 88 ரூபாயாகும். நுரைச்சோலை நிலக்கரி ஆலையில் இருந்து தினமும் 900 மெகாவோட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அதற்கு தேவையான நிலக்கரி அளவு 7,500 மெட்ரிக் டொன் ஆகும். எவ்வாறாயினும், நுரைச்சோலை நிலக்கரி ஆலையின் மூன்று ஜெனரேட்டர்களில் ஒன்றின் உற்பத்தியை இன்று முதல் தற்காலிகமாக நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனால் 300 மெகாவாட் மின்சாரம் தேசிய அமைப்பிற்கு இழக்கப்படும். அது தற்போது தனியார் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து கொள்வனவு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், தேசிய அமைப்பிற்கு இழந்த மின்சாரத் திறனைப் பெறுவதற்கு, எண்ணெய் ஆலையை அதன் முழு கொள்ளளவான 300 மெகாவாட்டுடன் இயக்குவதுடன், களனிதிஸ்ஸ கூட்டு சுழற்சி ஆலையும் இயக்கப்பட வேண்டும். இந்த நடைமுறை நடந்தால் தான் அடுத்த நிலக்கரி கப்பல் வரும் வரை தற்போதைய மின்வெட்டை பராமரிக்க முடியும். தற்போதுள்ள நிலக்கரி இருப்புக்களை நிர்வகிப்பதற்காக நுரைச்சோலை நிலக்கரி ஆலையின் மூன்று மின் உற்பத்தி இயந்திரங்களில் ஒன்றின் உற்பத்தியை இன்று முதல் தற்காலிகமாக நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. நுரைச்சோலையில் ஒரு ஜெனரேட்டர் செயலிழப்பதால் நாளாந்தம் 2,500 மெற்றிக் தொன் நிலக்கரி சேமிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம், தற்போதுள்ள நிலக்கரி அளவை மேலும் 16 நாட்களுக்கு மின் உற்பத்திக்கு சேமிக்க முடியும். இதேவேளை, அடுத்த வருடமும் மின் உற்பத்தி நிலையங்கள் மூடப்பட வேண்டும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், ​​நுரைச்சோலை ஆலையில் தற்போது நிலக்கரி இருப்பு இருப்பது ஜனவரி முதலாம் திகதி வரை மட்டுமே போதுமானது என தெரியவந்துள்ளது. இந்த ஆலையில் தற்போது கிடைக்கும் நிலக்கரியின் அளவு 80,000 மெட்ரிக் டொன் ஆகும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *