Connect with us

உள்நாட்டு செய்தி

மாணவ பிக்குகள் கஞ்சா பாவிப்பது மது அருந்துவது சாதாரணம்.- சிரி தம்ம தேரர்

Published

on

பாலி மற்றும் பௌத்த பல்கலைக்கழக மாணவர் பிக்குகள் மதுபானம் மற்றும் கஞ்சா அருந்துவது சாதாரணமானது என பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான பிக்குகள் சபையின் அழைப்பாளர் கல்வெவ சிறிதம்ம தேரர் தெரிவித்துள்ளார். பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் ஆதாரங்களுடன் படங்களை முன்வைத்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். பல்கலைக்கழகங்களில் சாதாரண மாணவர்களே இருப்பதாகவும், அவ்வாறான சம்பவங்கள் அவர்களுக்குள் அவ்வப்போது இடம்பெறுவதாகவும் தெரிவித்த சிறிதம்ம தேரர், இவ்வாறான ஒன்றிரண்டு சம்பவங்களுக்காக ஒட்டுமொத்த மாணவர் சமூகத்தையும் குற்றம் சுமத்துவது நியாயமற்றது எனவும் தெரிவித்தார்.