Connect with us

உலகம்

ஜனநாயகம் அழிந்தது – பைடன்

Published

on

தற்போது டிரம்ப் ஆதரவாளர்கள் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் பேரணிகளை நடத்தி வருகின்றனர்.

இதனால் அங்குள்ள முக்கிய வீதிகளில் ஆயுதம் தாங்கிய பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை பைடன் இந்த செயற்பாடுகளை வன்மையாக கண்டித்துள்ளார்.

“ஜனநாயகம் சிதைந்துவிட்டது என்பதை இன்றைய சம்பவம் நினைவுபடுத்தி உள்ளது. இது வேதனையானது. பொது நன்மைக்காக ஜனநாயகத்தை பாதுகாக்க நல்ல எண்ணம் கொண்ட மக்கள், தைரியமான தலைவர்கள் தேவை” என கூறி உள்ளார்.

இதேவேளை,பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் உள்ளிட்ட 3 பேர் பலியானதால், பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது..

இதேவேளை வன்முறையை தூண்டும் வகையில் கருத்துக்களை பதிவிட்ட குற்றச்சாட்டில் டிரம்பின் பேஸ்புக் மற்றும் டுவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

தேர்தலில் மோசடி நடைபெற்றுள்ளதாக டிரம்ப் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றமையும் குறிப்பிடப்பட்டுள்ளது.