Connect with us

உள்நாட்டு செய்தி

மருதனார்மடம் கடைத் தொகுதிகளை திறப்பதற்கான அனுமதி வழங்கப்படவில்லை

Published

on

மருதனார்மடம் கடைத் தொகுதிகளை திறப்பதற்கான அனுமதி இன்னமும் எம்மால் வழங்கப்படவில்லை. நிலைமைகளைக் கவனத்திலெடுத்தே அதற்கு அனுமதி வழங்க முடியும் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவக் கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

மருதனார்மடம் சந்தைக் கொத்தணி பரவலையடுத்து மூடப்பட்டுள்ள தமது வர்த்தக நிலையங்களை மீளத் திறப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என்று மருதனார்மடம் சந்தைச் சூழலிலுள்ள வர்த்தகர்கள் விடுத்துள்ள கோரிக்கை தொடர்பில் கேட்டபோதே பணிப்பாளர் இவ்வாறு தெரிவித்தார்.