Connect with us

உள்நாட்டு செய்தி

அஹுங்கல்ல பிரதேசத்தில் துப்பாக்கி பிரயோகம்: ஒருவர் பலி

Published

on

அஹுங்கல்ல, போகஹபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்றிரவு (23)போகஹபிட்டிய, ஊரகஹா வீதியில் முச்சக்கரவண்டியில் பயணித்துக் கொண்டிருந்த போது இருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது அஹுங்கல்ல பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அஹுங்கல்ல பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய மற்றைய நபர் பலப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

துப்பாக்கிச் சூட்டை நடத்திய சந்தேகநபர்கள் தொடர்பில் எந்தத் தகவலும் வெளியாகவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.