Connect with us

உள்நாட்டு செய்தி

நிலத்தகராறு: பிரித்த சகோதர பிணைப்பு

Published

on

அக்குரஸ்ஸ மாதொல பிரதேசத்தில் நேற்று (10) இரவு கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

அலுபோமுல்ல பிரதேசத்தை சேர்ந்த 47 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இருவருக்கும் இடையே நிலத்தகராறு தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் எல்லை மீறி சென்றதையடுத்து மூத்த சகோதரர் கூரிய ஆயுதத்தால் அந்த நபரை தாக்கியுள்ளார்.

சந்தேக நபர் தற்போது பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை அக்குரஸ்ஸ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.