Connect with us

உள்நாட்டு செய்தி

தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் இருந்து புதிய தகவல்

Published

on

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தாத அரசியல் பிரதிநிதிகளுக்கும் தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் எதிர்வரும் வாரத்தில் இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி, எதிர்வரும் 23ஆம் திகதி கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி. புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் சட்ட சீர்திருத்தங்களுக்கான பாராளுமன்ற விசேட குழு முன்மொழிந்துள்ள தேர்தல் முறை திருத்தங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.

முன்னதாக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தேர்தல்கள் ஆணைக்குழு இது தொடர்பில் விசேட கலந்துரையாடலை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது..