Connect with us

உள்நாட்டு செய்தி

சுயாதீன விசாரணை வேண்டும் – சாணக்கியன்

Published

on

சர்வதேச சுயாதீன விசாரணை மேற்கொள்ளப்படும் போதே எமக்கு நீதிகிடைப்பது சாத்தியமாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

வட கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட் ட உறவுகளின் சங்கத்திற்கு அனுப்பி வைத்துள்ள கடித்திலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

“இளைஞன் என்ற வகையில் பல வருடங்கள் கடந்தாலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதியினைப் பெற்றுக்கொடுக்கும் வரையில் நான் தளர்வடைய மாட்டேன் என்பதை உறுதியாக கூறுகின்றேன். இப்போராட்டத்தினை நீதி கிடைக்கும் வரையில் எக்காலகட்டத்திலும் கைவிடாது முன்கொண்டு செல்வேன் என உறுதியாக கூறுகின்றேன்.

பௌத்த சிங்கள பேரினவாத அரசாங்கம் நாட்டில் தலைதூக்கியுள்ள நிலையில், எமது நாட்டில் எமக்குரிய நீதி கிடைப்பதென்பது சந்தேகமே. ஆகையினால் எமது போராட்டங்களை சர்வதேச பார்வைக்கு கொண்டுவருவது எமது தலையாய கடமையாகும். எமது பிரச்சினைகள் ஐக்கிய நாடுகள் சபையின் தலையீட்டுக்கு கொண்டுவரப்பட வேண்டும்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் எங்கு எவ்வாறு இருக்கின்றார்கள் என்பது இன்றும் புரியாத புதிராகவே உள்ளது. இதற்கு தற்போதைய அரசு பதிலளிக்க வேண்டும்.

காலங்கள் பல சென்றாலும் மக்களுக்கான எனது பணிகள் தடைகள் பலவற்றையும் தாண்டி மேற்கொள்ளப்படும். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான எனது குரல் என்றும் ஒலிக்கும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.