Connect with us

உள்நாட்டு செய்தி

புஸ்ஸலாவ தேயிலை தொழிற்சாலையில் தீ

Published

on

புஸ்ஸலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரயிலன் தோட்டத்தில் அமைந்துள்ள தனியார் தேயிலை தொழிற்சாலையில் 26.07.2022 அன்று இரவு 7.20 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக தொழிற்சாலை  ஏரிந்து நாசமாகியுள்து.

தீயை அணைக்க புஸ்ஸலாவ பொலிஸாரும், பொது மக்களும் முயற்சித்த போதும் தீயினால் தொழிற்சாலை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தீ வீபத்துக்கான காரணம் இதுவரை சரியாக  கண்டறியப்படவில்லை என்பதுடன், சேத விபரங்களும் சரியாக கண்டறியபடவில்லை.

மின் ஒழுக்கின் காரணமாக இந்த தீ விபத்து இடம்பெற்றிருக்கலாம் என  பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

தேயிலை தொழிற்சாலையில் ஏற்பட்ட  தீ காரணமாக தொழிற்சாலையின் கட்டிடத்திற்கும், இயந்திரங்களுக்கும் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதுடன் தயாரிக்கப்பட்டிருந்த பெருந்தொகை தேயிலையும் சேதமாகி உள்ளது.

தீ விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதாக புஸ்ஸலாவ பொலிஸார் தெரிவித்தனர்.