Connect with us

Uncategorized

பசறையிலும் கொரோனா

Published

on

பசறை பிரதேச கோணக்கலை காவத்தை தோட்டத்தில் பெண் ஒருவருக்கும், டெமேரியா பிரிவு மீதும்பிட்டிய பகுதி ஆண் ஒருவர் உட்பட இருவருக்கு கொரோனா தொற்றுறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பில் இருந்து வருகைதந்த இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கடந்த 23 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் மாதிரியின் அடிப்படையில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக பசறை பிரதேச பொது சுகாதார பரிசோதகர் ராஜதுரை தெரிவித்தார்.

இதேவேளை, வட்டவளை பகுதியில் உள்ள ஆடைத்தொழிற்சாலையில் மேலும் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக பிரதேச பொது சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.