Connect with us

உள்நாட்டு செய்தி

நத்தார் பாசப்பிணைப்பை வலியுறுத்துகின்றது – ஜனாதிபதி

Published

on

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதி வழங்கப்படும் என ஜனாதிபதி தனது கிறிஸ்மஸ் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

சமூக ரீதியாக நத்தார் பண்டிகை குடும்பங்கள் ஒன்றிணைவுக்கும், பகைமைகளை மறந்து பாசப் பிணைப்புக்கு அடிதளம் அமைப்பதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

இதேவேளை நத்தார் பண்டிகை அன்பையும், கௌரவத்தையும் மெய்பிப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தனது கிறிஸ்மஸ் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாட்டில் உள்ள தேவாலயங்களில் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி கிரிஸ்மஸ் ஆராதனைகள் நேற்று நள்ளிரவு முதல் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடதக்கது.