Connect with us

உள்நாட்டு செய்தி

புதிய வரவு செலவு திட்டமொன்றை சமர்பிக்க எதிர்பார்ப்பு: நிதியமைச்சர்

Published

on

இலங்கை கொண்டுள்ள வெளிநாட்டு நாணயத்தில், தற்பொழுது பயன்படுத்தக்கூடிய தொகை 50 மில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைவடைந்திருப்பதாக நிதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி இன்று (04) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நிதி அமைச்சர் தலைமையிலான அதிகாரிகள் குழு சர்வதேச நாணய நிதியத்துடன் நடத்திய பேச்சு வார்த்தைகள் தொடர்பாக நிதி அமைச்சர் இன்று (04) பாராளுமன்றத்தில் விளக்கமளிக்கும் பொழுதே இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் தொடர்பான நிகழ்ச்சி நிரலை தொடர்வதற்கு மேலும் சுமார் 6 மாத காலம் செல்லக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.

வருமான வரியை அதிகரிக்க கூடிய புதிய வரவு செலவு திட்டமொன்றை சமர்பிக்க எதிர்பார்த்திருப்பதாக அமைச்சர் கூறினார்.

2021 ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவு திட்டத்திற்கு அமைய செயற்படுவது சிரமம் என்பதினாலேயே புதிய வரவு செலவுத்திட்டத்தை சமர்பிக்க எதிர்பார்த்திருப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

தற்பொழுது பொருளாதார நெருக்கடி மேலும் 2 வருட காலம் நீடிக்க கூடும் .