Connect with us

உள்நாட்டு செய்தி

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது

Published

on

ரம்புக்கனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொலிஸ் ஊரடங்குச் சட்டம் காலை 5 மணி முதல் தளர்த்தப்பட்டுள்ளது.

ரம்புக்கனை பிரதேசத்தில் போராட்டம் காரணமாக ஏற்பட்ட பதற்றத்தை அடுத்து அங்கு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது.

இந்த சம்பவத்தில் மொத்தம் 32 பேர் காயமடைந்துள்ளனர்.

சம்பவத்தில் ரம்புக்கனை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரையின் பேரில் விசாரணை நடத்துவதற்கு சிரேஷ்ட அதிகாரிகள் உட்பட 20 பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.