Connect with us

உள்நாட்டு செய்தி

மின்வெட்டு நேரத்தை மூன்றரை மணித்தியாலங்களாக குறைக்க தீர்மானம்

Published

on

மின்வெட்டு நேரத்தை மூன்றரை மணித்தியாலங்களாக குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருளை வழங்குவதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் உறுதியளித்துள்ள நிலையில் இ்ந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.

இன்றைய தினம் 4 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்வெட்டினை மேற்கொள்ள முன்னதாக மின்சார சபைக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.