Connect with us

உள்நாட்டு செய்தி

அரசில் இருந்து வெளியேறவேண்டிய தேவையில்லை: இ.தொ.கா

Published

on

அரசுக்கும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுக்கும் இடையில் சிறந்த நல்லுறவு இருக்கின்றது. எனவே, அரசில் இருந்து வெளியேறவேண்டிய தேவையில்லை. அரசில் இருந்தபடியே மக்களுக்காக போராடும் தைரியம் காங்கிரசுக்கு இருக்கின்றது.” – என்று இ.தொ.காவின் நிதிச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார்.

அத்துடன், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபை 30 ஆம் திகதி கூடும் எனவும், இதன்போது புதிய தலைவர் பதவி இடம்பெறும் எனவும் அவர் கூறினார். 

27.03.2022 அன்று நுவரெலியா – நானுஓயா பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வின் பின் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.