Connect with us

உள்நாட்டு செய்தி

ஜனாதிபதிக்கும், கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்பு ஒத்தி வைப்பு

Published

on

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இன்று(15) மாலை இடம்பெறவிருந்த கலந்துரையாடல் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுடனான இந்த சந்திப்பு ஏற்கனவே இரு சந்தர்ப்பங்களில் ஒத்திவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.