Connect with us

உள்நாட்டு செய்தி

உடுவரையில் மாணவி ஒருவரை கொலை செய்த சந்தேகநபர் விளக்க்கமறியலில்

Published

on

பதுளை, உடுவரை கீழ்பிரிவைச் சேர்ந்த 18 வயது மாணவியின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் எதிர்வரும் 18 ஆம் திகதிவரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் நேற்று (09) மாலை பதுளை நீதவான் நீதிமன்ற நீதிபதி சமிந்த கருணாதாச முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதன்போதே குறித்த விளக்க மறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கையை அன்றைய தினம் சமர்பிக்குமாறும் ஹாலி – எல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

32 வயதான சந்தேகநபர் நேற்று (09) அதிகாலை கைது செய்யப்பட்ட நிலையில் அவர் மாலை பதுளை நீதவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதாக ஹாலி – எல பொலிஸார் தெரிவித்தனர்..

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *