Connect with us

உள்நாட்டு செய்தி

அமைச்சரவையை மாற்றுவதால் பிரச்சினைகள் தீரப்போவதில்லை – திஸ்ஸ அத்தநாயக்க

Published

on

நாட்டை மீட்டெடுத்து, மக்களைப் பாதுகாப்பதற்கான தேசிய வேலைத்திட்டம் எம்மிடம் உள்ளது. எனவே, மக்கள் ஆணை வழங்கினால் ஆட்சியை பொறுப்பேற்று, சிறந்த நிர்வாகத்தை வழங்குவோம் – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

நுவரெலியா – கொத்மலை கடதொர பகுதியில் 06.03.2022 அன்று காலை ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க, மேற்கண்டவாறு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்