Connect with us

உள்நாட்டு செய்தி

ஹட்டன் படர்கல தோட்ட பகுதியில் விபத்து: ஒருவர் பலி

Published

on

ஹட்டன் படர்கல தோட்ட பகுதியில் இன்று (28) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தில் மரியசவரி என்ற 55வயதுடைய ஆண் தொழிலாளி  உயிரிழந்துள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்..

விபத்தில் மேலும் 16 பேர் காயமடைந்து கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தனியார் தொழிற்சாலை ஒன்றுக்கு தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற சிறிய ரக பஸ் ஒன்றே வீதியை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.