Connect with us

உலகம்

தென்னாப்பிரிக்க பாராளுமன்ற கட்டிடத்தில் பாரிய தீ

Published

on

தென்னாப்பிரிக்க பாராளுமன்ற கட்டிடத்தில் பாரிய தீவிபத்து சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளது.

கட்டிட தொகுதியின் கூரை பகுதியிலேயே முதலில் தீ பரவியதாகவும் அதன் பின்னர் கட்டிடத்திற்குள் தீ பரவியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த தீ விபத்தினால் யாருக்கும் உயிர்சேதம் ஏற்படவில்லை என்றும் 35 தீயணைப்புப்படை வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவர போராடி வருகின்றனர் என்றும் கேப் டவுன் நகர தீயணைப்பு மற்றும் மீட்பு சேவை செய்தி தொடர்பாளர் ஜெர்மைன் கேரல்ஸ் தெரிவித்தார்.

தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.