வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று (21) நுவரெலியா மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளுக்கு சிகிச்சை பெற சென்ற நோயாளிகள் கடும் சிரமங்களுக்கும் பல்வேறு அசௌகரியங்களுக்கும் உள்ளாகினர்.
7 அம்ச கோரிக்கைகளை முன் வைத்தே நாடளாவிய ரீதியில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.