Connect with us

உள்நாட்டு செய்தி

பாராளுமன்ற அமர்வுகளை ஒத்திவைத்து ஜனாதிபதி வர்த்தமானி

Published

on

பாராளுமன்ற அமர்வுகளை ஒத்திவைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 70 ஆவது சரத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைய ஜனாதிபதியினால் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு அமைய 2022 ஜனவரி 18 ஆம் திகதி காலை 10 மணிக்கு மீண்டும் பாராளுமன்றம் கூடும் என குறித்த வர்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.