Connect with us

உள்நாட்டு செய்தி

மன்னார் மாவட்டதில் சீரற்ற காலநிலை

Published

on

மன்னார் மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளப் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதுடன் விவசாய நிலங்களில் அதிகளவு நீர் தேங்கியுள்ளதால் அதிகளவான விவசாயிகள் மற்றும் பொது  மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ச்சியாக மன்னார் மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக தாழ் நில கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளது டன் விவசாய செய்கையும் அழிவடைந்துள்ளன. 

மழை தொடரும் பட்சத்தில் பல நூற்றுக்கணக்கான   குடும்பங்கள் இடம்பெயர வேண்டிய நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது