Connect with us

உள்நாட்டு செய்தி

கடும் மழை: நுவரெலியா மாவட்ட நிலவரம்

Published

on

நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் காற்றுடன் கூடிய கடும் மழையினால் 254 குடும்பங்களைச் சேர்ந்த 648 பேர் நிர்கதியாக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் நந்தன கலகொட தெரிவித்துள்ளார்.

இச்சம்பவங்களில் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் நான்கு பேர் நீரில் அடித்துச்செல்லப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்கள் உறவினர்கள் வீடுகளிலும் தற்காலிக இடங்களிலும் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.