Connect with us

உள்நாட்டு செய்தி

மாவீரர் நாள் நிலைவேந்தலிற்கு கிளிநொச்சி நீதிமன்றிலும் தடையுத்தரவு

Published

on

மாவீரர் நாள் நிலைவேந்தலிற்கு கிளிநொச்சி நீதிமன்றிலும் தடையுத்தரவு இன்று பெறப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பொலிசாரால் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் இவ்வாறு தடையுத்தரவு இன்றைய தினம் பெறப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் கனகபுரம், விசுவமடு, முழங்காவில் ஆகிய பகுதிகளில் மாவீரர் துயிலுமில்லங்கள் காணப்படுகின்றன.

குறித்த துயிலுமில்லங்களில் கடந்த 2017 மற்றம் 18ம் ஆண்டுகளில் மாவீர்நாள் நினைவேந்தல்கள் இடம்பெற்றன.

இந்த நிலயைில் 2019ம் ஆண்டுக்க பின்னர் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர் மாவீரர் நாள் நினைவேந்தல்களிற்கு தடைகள் பிறப்பிக்கப்பட்டன.

எதிர்வரும் 27ம் திகதி மாவீரர் நாள் நினைவேந்தல்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலயைில் இன்யை தினம் தடையுத்தரவுகள் பெறப்பட்டுள்ளது.