Connect with us

Sports

கைதான இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்

Published

on

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பட்டியலின மக்களை இழிவுபடுத்தி பேசியதாக யுவராஜ் சிங் மீது சட்டத்தரணி ஒருவர் அரியானா பொலிஸ் நிலையத்தில் முறையிட்டிருந்தார்.

இதனடிப்படையிலேயே அவர் கைதாகி பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

யுவராஜ் சிங். கடந்த வருடம் தனது இன்ஸ்டாகிராம் வீடியோவில் யுஸ்வேந்திர சாகலுடன் பேசிய போது சாதி ரீதியிலான சில வார்த்தைகளை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

குறிப்பாக பட்டியலின மக்களை இழிவுபடுத்தி பேசியதாக கூறி சட்டத்தரணி ஒருவர் அரியானா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவுச் செய்திருந்தார்.

இந்த நிலையில் யுவராஜ் சிங் சில மணி நேரத்தில் பிணையில் விடுதலையானதாக தெரிவிக்கப்படுகின்றது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *