Connect with us

உலகம்

நோர்வேயில் வில் அம்புகளை எய்து, பயங்கர தாக்குதல்

Published

on

நோர்வேயில் வில் அம்புகளை எய்து பலரை கொலை செய்த கொடூர சம்பவம் நடைபெற்ற நிலையில், மர்ம நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நார்வே தலைநகர் ஓஸ்லோவின் தென்மேற்கில் காங்ஸ்பெர்க் நகரில் இன்று மர்ம நபர் பயங்கர தாக்குதல் நடத்தியுள்ளான்.

மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள இடத்தில் வில், அம்புடன் வந்த அந்த நபர் மக்களை அம்புகள் எய்தி தாக்கியுள்ளான்.

மேலும், துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளான்.

இதில் ஏராளமான மக்கள் உயிரிழந்திருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால், பொலிஸார் இறந்தவர்களின் எண்ணிக்கையை வெளியிடவில்லை.

காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.