Connect with us

உள்நாட்டு செய்தி

இன்று இலங்கையில் ஆசிரியர் தினம்

Published

on

இன்று (ஒக்டோபர் 06) இலங்கையில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகின்றது.

ஆசிரியர்களின் மேன்மையை வருங்கால சந்ததியினர் உணரும் விதமாகவும், ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் இலங்கையில் வருடந்தோறும் ஒக்டோபர் மாதம் 06 ஆம் திகதி ஆசிரியர்கள் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

ஆசிரியர் – அதிபர்களின் சம்பள முரண்பாடு மற்றும் நாட்டிலுள்ள மாணவர்களின் கல்வி உரிமையை பாதுகாத்தல் போன்ற பிரதான காரணிகளை அடிப்படையாக கொண்டு இலங்கை ஆரிசியர் சேவை சங்கத்தினால் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் இன்றைய தினமும் (06) ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆரிசியர் சேவை சங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் வரையில் இவ்வாறு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட எதிர்பார்த்துள்ளதாகவும் ஆரிசியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

நாடளாவிய ரீதியிலுள்ள 312 கோட்டக்கல்வி பணிமனைகளை அடிப்படையாகக் கொண்டு எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுக்க இலங்கை ஆசிரியர் சங்கம் தீர்தானித்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *