Connect with us

உள்நாட்டு செய்தி

மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு, இன்றும் மழை

Published

on

இன்றைய தினம் நாட்டின் ​அநேகமான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அதன்படி, வடக்கு, வட மத்திய, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களுக்கு 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, நுவரெலியாவில் நேற்று (01) பெய்த கன மழையால் கெரகரி குளத்தை அண்மித்த பகுதிகள் வெள்ள நீரில் முழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை நானுஓயா ஆறு பெருக்கெடுத்துள்ளது.

இதனால் 10 கடைகள் நீரில் முழ்கியுள்ளன .

இதேவேளை, 5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை மாலை 6 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிர்வகம் தெரிவித்துள்ளது.