Connect with us

உள்நாட்டு செய்தி

மேல் கொத்மலை நீர் தேக்கத்தின் ஒரு வான் கதவு திறப்பு

Published

on

மத்திய மலைநாட்டில் தொடர்ந்தும் மழை பெய்து வருவதாக செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சென் கிளாயார், டேவோன் ஆகிய நீர் வீழ்ச்சிகளில் இருந்து பாயும் நீரின் அளவும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (01) நள்ளிரவு முதல் மேல் கொத்மலை நீர் தேக்கத்தின் ஒரு வான் கதவு திறக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக மழை பெய்தால் நீர் தேக்கத்தின் ஏனைய வான் கதவுகளும் திறக்கப்படும் அபாயம் உள்ளது.

எனவே நீர் தேக்கத்தை அண்டி வாழும் மக்கள் அவதானமாக செயற்படுமாறும் நீர் தேக்க பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.