Connect with us

உள்நாட்டு செய்தி

5 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

Published

on

நாட்டின் பெரும்பலான இடங்களில் தொடரும் மழையை அடுத்து 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிர்வகம் தெரிவித்தள்ளது.

கண்டி, கேகாலை, இரத்தினபுரி, காலி மற்றும் களுத்துறை மாவட்டங்களுக்கே இவ்வாறு மண் சரிவ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யயக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியள்ளது.

மத்திய மலை நாட்டின் பல பகுதிகளில் கன மழை பெய்து வருவதாக எமது செய்தியாளர் கூறினார்.