Connect with us

உள்நாட்டு செய்தி

மகாவெலி ஆற்றிலிருந்து வயோதிப் பெண்ணின் சடலம்

Published

on

மகாவெலி ஆற்றிலிருந்து வயோதிப் பெண்ணின் சடலம் ஒன்றை நாவலப்பிட்டி பொலிஸார் மீட்டுள்ளனர்.

ஆறு பிள்ளைகளின் தாயான 84 வயதுடைய நாவலப்பிட்டி டேலி வீதியை சேர்ந்த ஹெகலின்னாரங்கல என்பரவே இன்று (14) இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

நான்கு நாட்களுக்கு முன்னர் வீட்டிலிருந்த தாய் காணாமல் போயுள்ளதாக நாலப்பிட்ட பொலிஸார் நிலையத்தில் சடலமாக மீட்கப்பட்டவரின் மகள் முறைப்பாடு செய்துள்ளார்.

பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த நிலையில் நாவலப்பிட்டி பத்துருபிட்டிய பகுதியில் மகாவெலி ஆற்றின் பெண்ணின் சடலமொன்று மிதப்பதாக பொலிஸாருக்கு பிரதேசவாசிகளினால் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து நாலப்பிட்டி பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளதுடன் நாவலப்பிட்டி நீதவான் நீதிமன்ற நீதிபதி மிலந்த விமலரத்ன முன்னிலையில் மரண விசாரணை இடம்பெற்று பிரேத பரிசோதனைக்காக சடலம் நாவலப்பிட்டி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *