Connect with us

உள்நாட்டு செய்தி

12 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி

Published

on

12 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையை இம்மாதம் இறுதி வாரத்தில் ஆரம்பிக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளரின் தலைமையில் நேற்று (11) இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் ஜீ.விஜேசூரிய தெரிவித்தார்.

முதலாவது கட்டத்தில் 35,000 சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.