Connect with us

உள்நாட்டு செய்தி

மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்களை பகிர்ந்தளிக்கும் வேலைத்திட்டம்

Published

on

மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்களை பகிர்ந்தளிக்கும் துரித வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ‘சதொச’ நிறுவனத்தின் தலைவர் ரியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இரண்டு முறைகளின் கீழ் உணவு பொருட்கள் பகிர்ந்தளிக்கப்படுதாக அவர் கூறினார்.

அனைத்து சதொச கிளைகளும் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சதொச கிளைகளை திறந்து வைப்பதன் மூலம் கொரோனா கொத்தணியை ஏற்படுத்த முயற்சிப்பதாக எதிர்க்கட்சி முன்வைக்கும் குற்றச்சாட்டை மறுத்துரைப்பதாகவும் ‘சதொச’ நிறுவனத்தின் தலைவர் ரியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஹட்டன் சதொச விற்பனை நிலையத்தில் ஒரு கிலோ கருப்பு சீனி 130 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டதாக எமது செய்தியாளர் கூறினார்.

இவ்வாறு விற்கப்பட்ட சீனியை கொள்வனவு செய்ய ஹட்டன் பகுதியைச் சேர்ந்த மக்கள் அதிகளவில் ஆர்வம் காட்டியதாக எமது செய்தியாளர் கூறினார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *