Connect with us

Uncategorized

தீர்வு இல்லாவிடின் தொழிற்சங்க நடவடிக்கை கடுமையாகும் : ஜோசப் ஸ்டாலின்

Published

on

தமது சம்பள பிரச்சினை தீர்ப்பதற்காக நேற்று (23) கூடிய அமைச்சரவை கூட்டத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இவ்வாறான நிலையில் தமது கோரிக்கைகளுக்கு தீர்வு இல்லை என்றால் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்க எதிர்ப்பார்த்துள்ளதாக அதன் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்கள் ஊடாக ஆசிரியர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்த சிலர் முயற்சிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.