Connect with us

உள்நாட்டு செய்தி

ஜனாதிபதி இன்று விசேட உரை

Published

on

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, நாட்டு மக்கள் மத்தியில் உரை நிகழ்த்த தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

கொவிட் பரவலினை கட்டுப்படுத்த நாட்டை மூடுமாறு பல்வேறு தரப்பினர் ஜனாதிபதியிடம் தொடர்ந்து கோரி வந்த நிலையில் ஜனாதிபதி ஊடக பிரிவு இந்த அறிவிப்பை வௌியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனினும், அதற்கான நேரம் இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறுகின்றது.

இதேவேளை, நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து ஜனாதிபதி, அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் மகாநாயக்க தேரர்களை சந்தித்து தெளிவூட்டவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.