Connect with us

உள்நாட்டு செய்தி

யாழ்.பண்ணை குளத்தில் தவறி விழுந்த இளைஞன் பலி

Published

on

யாழ்ப்பாணம் பண்ணை குளத்தில் தவறி விழுந்து இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக யா.பொலிஸார் தெரிவித்தனர்.

நல்லூர் பகுதியைச் சேர்ந்த 29 வயதான இளைஞன் ஒருவரே இவ்வாறு நீரில் முழ்கி உயிரிழந்துள்ளார்.

பண்ணை பாலத்தடியில் நேற்று (08) மாலை நண்பர்களுடன் பொழுதை கழித்துக் கொண்டு இருந்த வேளை குறித்த நபர் தவறி விழுந்துள்ளார்.

தவறி விழுந்தவரை பாலத்தின் கீழான நீரோட்டம் அடித்து சென்றிருந்த நிலையில் நேற்றைய தினம் சுமார் 2 மணி நேரங்களுக்கு மேலாக கடற்படையினை தேடுதல் நடாத்தி இருந்தனர்.

இந்நிலையில் பண்ணை பகுதியில் இருந்து இன்று (09) காலை குறித்த நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.